• Wed. Aug 20th, 2025

24×7 Live News

Apdin News

சிறுநீரகத்துக்கு எட்டு லட்சம், கல்லீரலுக்கு நான்கரை லட்சம் ! – நாமக்கல் பெண்ணின் புகாரால் அதிர்ச்சி

Byadmin

Aug 20, 2025


கல்லீரல் முறைகேடு

பட மூலாதாரம், Getty Images

சிறுநீரக விற்பனை புகாரில் சிக்கிய நாமக்கல் மாவட்டத்தில் கல்லீரல் முறைகேடும் நடைபெற்றிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தரகர்கள் மூலம் ஒரு கட்டத்தில் கட்டாய கல்லீரல் தானம் செய்ய நேரிட்டதாக பெண் ஒருவர் இதனை பிபிசி தமிழிடம் உறுதி செய்துள்ளார்.

இதில் சம்பந்தப்பட்ட 2 தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரிக்க நாமக்கல் மாவட்ட சார்பு ஆட்சியர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வறுமையினால் கடனைத் தீர்ப்பதற்காக சிறுநீரகத்தை விற்பனை செய்வது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்பகுதியில் 5 பேரிடம் முறைகேடாக சிறுநீரகம் எடுக்கப்பட்டதாக சமீபத்தில் எழுந்த புகாரின்பேரில், அரசு சார்பில் சிறப்புக்குழு ஆய்வு செய்து, திருச்சி மற்றும் பெரம்பலுார் நகரங்களில் உள்ள 2 மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது. அத்துடன் சில பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்கியுள்ளது.

இந்நிலையில், தற்போது இதே பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவர், தன்னிடம் விலை பேசி கல்லீரல் தானத்திற்காக கல்லீரலின் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

By admin