• Tue. Oct 22nd, 2024

24×7 Live News

Apdin News

சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை – நீதிமன்றத்தில் விசாரணை

Byadmin

Oct 22, 2024


ஒன்பது வயதுச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக நடுவர் மன்றம் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதி பிரான்சில் இருந்து இலண்டனுக்கு பயணித்த சந்தர்ப்பத்தில் தனது குடும்பத்திலிருந்து பிரிந்த சிறுமியை, ராபர்ட் புருசாக் என்ற நபர் அணுகியுள்ளார்.

குறிப்பிட்ட முகவரி இல்லாத பிரதிவாதி தன்னை ஒரு சில நிமிட தூரத்தில் உள்ள தனது பிளாட்டுக்கு அழைத்துச் சென்றதாக , பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

57 வயதுடைய புருசாக், தன் மீது சுமத்தப்பட்டுள்ள 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை, பாலியல் குற்றத்தை செய்யும் நோக்கத்துடன் கடத்தல் மற்றும் போதைப்பொருளை வழங்குதல் ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளை நீதிமன்றில் மறுத்துள்ளார்.

மத்திய இலண்டனில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோருக்குச் சென்றபோது சிறுமி தொலைந்து போனதாக சம்பவம் தொடர்பில் வழக்கு தொடர்ந்த Nneka Akudolu KC நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

By admin