• Tue. Jun 17th, 2025

24×7 Live News

Apdin News

சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியிடம் நீதிமன்றம் சொன்னது என்ன? கைது செய்யப்படுவாரா?

Byadmin

Jun 17, 2025


சிறுவன் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை, ஏடிஜிபி கைது

பட மூலாதாரம், PBK/Facebook

படக்குறிப்பு, பூவை ஜெகன்மூர்த்தி காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

ஒரு சிறுவனைக் கடத்திய விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீதும் காவல் துறை ஏடிஜிபி மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. இதில் ஏடிஜிபியை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் என்ன நடக்கிறது?

ஒரு காதல் திருமண விவகாரம் தொடர்பாக 18 வயது நிரம்பாத சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் ஏடிஜிபி எச்.எம். ஜெயராமைக் கைதுசெய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

என்ன நடந்தது?

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த பூவை ஜெகன்மூர்த்தி

பட மூலாதாரம், PBK/Facebook

படக்குறிப்பு, நீதிமன்றத்தில் ஆஜராக வந்த பூவை ஜெகன்மூர்த்தி

திருவள்ளூர் மாவட்டத்தில் களாம்பாக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ். 23 வயதான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக, தேனி மாவட்டத்திற்கு ஒரு விளையாட்டுப் போட்டிக்காகச் சென்றபோது, அந்த ஊரைச் சேர்ந்த பெண்ணுடன் அறிமுகமாகி பழக ஆரம்பித்தார்.

By admin