12
சோஹாமில் 2002ஆம் ஆண்டில் 10 வயது சிறுவர்களான ஹோலி வெல்ஸ் மற்றும் ஜெசிகா சாப்ப்மனை கொலை செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த யான் ஹண்ட்லி என்ற நபர், தாக்குதலுக்குப் பின் 52 வயதில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பிரிட்டனின் மிக உயர்ந்த பாதுகாப்பு கொண்ட ஹம்பி பிராங்க்லாந்தில் கடந்த வாரம் நடந்த இந்த தாக்குதலில் ஹண்ட்லி பலமுறை இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ப்ராங்க்லாண்ட் சிறைச்சாலையின் ஒருங்கிணைந்த பகுதியில், நபர் ஒருவர் மூன்று அடி நீளமான உலோகக் கம்பியால் ஹண்ட்லியை 15 முறை வரை தாக்கியதாக, சம்பவத்தை நேரில் பார்த்த மற்ற கைதிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யான் ஹண்ட்லி, உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.