தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘அமரன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவு சாரல் நீ’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அமரன்’ எனும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராகுல் போஸ், புவன் அரோரா, ஸ்ரீ குமார் , ஷியாம் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சி. ஹெச். சாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
தேசப்பற்று மிக்க ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 31 ஆம் திகதி தீபாவளி திருநாளன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ‘அமரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவு சாரல் நீ’ என தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுத, பின்னணி பாடகர் கபில் கபிலன் மற்றும் பின்னணி பாடகி ரக்ஷிதா சுரேஷ் ஆகிய இணைந்து பாடியிருக்கிறார்கள்.
‘இசை அசுரன்’ ஜீ வி பிரகாஷ் குமாரின் வசீகரிக்கும் மெல்லிசை மெட்டுகளில் யுக பாரதி ,கபில் கபிலன், ரக்ஷிதா சுரேஷ் ஆகியோர் இணைந்து நிகழ்த்திய மாயாஜாலத்தால் இப்பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இதனிடையே சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படத்தின் இசை வெளியீடு நாளை சென்னையில் நடைபெறுகிறது என்பதும், இதில் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் சிறப்பு அதிதியாக பங்குபற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
The post சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு appeared first on Vanakkam London.