• Fri. Oct 25th, 2024

24×7 Live News

Apdin News

சீமான்: ஒற்றைப் பனை மரம் படத்திற்கு எதிர்ப்பு ஏன்? – என்ன சர்ச்சை?

Byadmin

Oct 25, 2024


ஒற்றைப் பனை மரம்: சீமான்

புதியவன் ராசைய்யா என்பவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’ படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்றும் கூறியிருக்கிறார். என்ன காரணம்?

புதியவன் ராசைய்யா என்ற இயக்குநர், ‘ஒற்றைப் பனை மரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நவயுகா, அஜாதிகா புதியவன், மாணிக்கம் ஜெகன், தனுவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்துள்ளார். அக்ஷயா என்பவர் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படம் சில ஆண்டுகளுக்கு முன்பே தயாராகிவிட்ட நிலையில், பல திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டது. தற்போது இந்தப் படம் தமிழ்நாட்டில் அக்டோபர் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்தை தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்கக்கடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

By admin