• Mon. Jun 2nd, 2025

24×7 Live News

Apdin News

சீரற்ற காலநிலையால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்பட்டன

Byadmin

Jun 1, 2025


சீரற்ற காலநிலை காரணமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பிற்போட்டுள்ளது.

மூன்று வகை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தீர்மானத்திற்கு அமையவே கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளது.

இதற்கு அமைய பிரதான கழக ரி20 சுற்றுப் போட்டி, பி அடுக்கு ரி20 சுற்றுப்போட்டி, ஆளுநர் கிண்ண சுற்றுப் போட்டி ஆகியனவே பிற்போடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

காலநிலை சீரானதும் புதிய அட்டவணையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிடும். இதேவேளை, இன்னும் பல விளையாட்டுப் போட்டிகளை பல்வேறு அமைப்புகள் பிற்போட்டுள்ளன.

By admin