1
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் ஜூலை மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று மாலை உத்தரவிட்டுள்ளார்.
ஜனக ஸ்ரீ சந்திரகுப்த வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியிருந்த போது கைது செய்யப்பட்டிருந்தார்.