• Mon. Apr 13th, 2026

24×7 Live News

Apdin News

“சுனாமியை விட பெருஞ்சேதம்” – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இரான் போர் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

Byadmin

Apr 13, 2026


இரான், இந்தியா, வெள்ளம், மத்திய கிழக்கு, இலங்கை

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இரான் போர் காரணமாக இலங்கையில் எரிபொருள் விலை உயர்வுடன் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது

வெள்ளம் தங்கள் கிராமத்தை நாசமாக்கிய பிறகு, இந்திராணி ரவிச்சந்திரனும் அவரது குடும்பத்தினரும், அவர்கள் வீட்டில் இன்னும் சேதமடையாமல் இருக்கும் ஒரு பகுதிக்கு திரும்பி வந்துள்ளனர்.

கடந்த நவம்பரில் இலங்கையை பேரழிவுக்குள்ளாக்கிய தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பலரில் அவர்களும் அடங்குவர்.

புயலின் அளவும், அது ஏற்படுத்திய அழிவும் முன்னெப்போதும் இல்லாதவை.

வெறும் மூன்று நாட்களில், இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளின் சில பகுதிகளில் 500 மி.மீ வரை மழை பெய்தது. இது ஏறக்குறைய இரண்டு மாதங்களின் சராசரி மழைக்குச் சமம். இதனால் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் முழு குடியிருப்புகளையும் அடித்துச் சென்றன.

இதனால் ஏற்பட்ட மனித இழப்பு பேரழிவை ஏற்படுத்தியது – 643 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 173 பேர் காணாமல் போயினர்.

By admin