• Sat. Dec 20th, 2025

24×7 Live News

Apdin News

சுனாலி கதுன்: வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டு இந்தியா திரும்பிய கர்ப்பிணி பட்ட பாடு என்ன?

Byadmin

Dec 20, 2025


சுனாலி கதுன், இந்திய - வங்கதேசம், டெல்லி, மேற்கு வங்கம்
படக்குறிப்பு, சுனாலி கதுனும் அவரது குடும்பத்தினரும் வஙதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்

தனது கர்ப்ப காலத்தின் இறுதி வாரங்களில் இருக்கிறார், 25 வயதான சுனாலி கதுன்.

“எனது குழந்தை வங்கதேசத்தில் பிறந்தால், அதன் குடியுரிமை மாறிவிடுமோ என்று அஞ்சினேன்” எனக் கூறுகிறார் சுனாலி.

இந்த ஆண்டு ஜூன் மாதம் அண்டை நாடான வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்ட அவர், இந்த மாத தொடக்கத்தில் இந்தியா திரும்பினார்.

டெல்லியில் வீட்டு வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்த, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான சுனாலி, அவரது கணவர் டேனிஷ் ஷேக் மற்றும் எட்டு வயது மகனுடன் காவலில் வைக்கப்பட்டார். அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டனர்.

வங்கதேச அதிகாரிகளோ அந்த குடும்பத்தினர் தங்கள் நாட்டின் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் குற்றம் சாட்டி சிறையில் அடைத்தனர்.

By admin