கடலில் விழுந்த விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் வெளியேறிய தருணம் – காணொளி
டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் வெளியே அழைத்துவரப்பட்ட தருணம் இது.
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.
விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் பூமி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் அவர்கள் 9 மாதங்களுக்கு மேலாக அங்கேயே தங்கியிருக்க நேர்ந்தது.
மார்ச் 18ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரை பூமிக்கு அழைத்துவரும் பணி தொடங்கியது.
இந்திய நேரப்படி மார்ச் 18ம் தேதி காலை 10.35 மணிக்கு சுனிதா உள்ளிட்டோர் பயணிக்கும் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்தது.
மார்ச் 19ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் அவர்கள் பூமி திரும்பினர்.
ஃப்ளோரிடாவின் கடற்பரப்பில் டிராகன் விண்கலம் தரையிறங்கியது.
படகில் சென்ற மீட்புப் படையினர் விண்வெளி வீரர்கள் வந்த விண்கலத்தை மீட்டனர்.
பின்னர் மேகன் என பெயரிடப்பட்ட மீட்பு கப்பலில் விண்கலம் ஏற்றப்பட்டது.
விண்கலத்தில் 17 மணி நேரத்தை செலவிட்ட பின்னர், அனைவரும் பத்திரமாக வெளியே அழைத்துவரப்பட்டனர்.