• Thu. Nov 6th, 2025

24×7 Live News

Apdin News

சுப்ரமணியம் வேதம்: செய்யாத கொலைக்கு 43 ஆண்டு சிறை – விடுதலைக்கு பிறகும் நாடு கடத்த முயல்வது ஏன்?

Byadmin

Nov 6, 2025


அமெரிக்கா, இந்தியா, நாடு கடத்துவது, குடியேற்ற அதிகாரிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 64 வயதான சுப்ரமணியம் “சுப்பு” வேதம் என்பவர் 1983-ஆம் ஆண்டு தனது அறையில் தங்கியிருந்தவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டிருந்தார்.

    • எழுதியவர், ஷெரிலன் மொல்லன்
    • பதவி, பிபிசி நியூஸ், மும்பை

அமெரிக்காவில் செய்யாத கொலைக்காக 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்துவதற்கு இரு வெவ்வேறு அமெரிக்க நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன.

64 வயதான சுப்ரமணியம் “சுப்பு” வேதம் என்பவர் 1983-ஆம் ஆண்டு தனது அறையில் தங்கியிருந்தவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டார். ஆனால் அந்த வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைக்கவே கடந்த அக்டோபரில் விடுதலை செய்யப்பட்டார்.

வேதம் விடுதலையான உடனே அமெரிக்கா குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ஐசிஇ) அவரை மீண்டும் விசாரணைக்கு எடுத்து இந்தியாவிற்கு நாடு கடத்தப் போவதாகத் தெரிவித்தது.

வேதம் இந்தியாவில் பிறந்தாலும் அவருக்கு 9 மாதங்கள் இருந்தபோதே அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து விட்டதாக அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் நிரந்தர சட்டப்பூர்வ குடியேறியான அவரின் குடியுரிமை விண்ணப்பம் அவர் கைது செய்யப்படுவதற்காக முன்பாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அமெரிக்கா, இந்தியா, நாடு கடத்துவது, குடியேற்ற அதிகாரிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுப்புவை விடுதலை செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் அவரின் சகோதரி சரஸ்வதி வேதம் பேசுகிறார்.

தற்போது லூசியானாவின் அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள தடுப்பு காவல் மையத்தில் வேதம் சிறை வைக்கப்பட்டுள்ளார். இங்கு நாடு கடத்துவதற்கான விமான தளம் அமைந்துள்ளது.

By admin