• Fri. Feb 27th, 2026

24×7 Live News

Apdin News

சுரேஷ் சலே: இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு வழக்கில் அரசு முன்னாள் அதிகாரி கைது ஏன்?

Byadmin

Feb 27, 2026


இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு

பட மூலாதாரம், ITJP

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலே, 72 மணிநேரம் தடுத்து வைக்கப்படும் உத்தரவு மூலம் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் உதவி போலீஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பில், 72 மணிநேர விசாரணைக்கு பின்னர் எடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

”கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்யும் அதிகாரம் பொலிஸ் அத்தியட்சர் ஒருவருக்கு காணப்படுகின்றது, அதன்பின்னர் தேவையேற்படும் பட்சத்தில் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தும் நீதிமன்ற அதிமதியை பெற்று 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த முடியும். அப்படியில்லை என்றால், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவரை விடுவிக்க முடியும்” என போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு - சுரேஷ் சலே கைது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி இலங்கையின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அதிகளவில் நடமாடும் முன்னணி ஹோட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

‘தெளிவான சாட்சியத்தின் அடிப்படையில் சந்தேக நபர் கைது’

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் ஊடக சந்திப்பு கடந்த 25-ஆம் தேதி நடைபெற்றது.

By admin