• Fri. Jun 6th, 2025

24×7 Live News

Apdin News

சூடான் அகதிகள் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஐ.நா தகவல்!

Byadmin

Jun 5, 2025


சூடானில் இருந்து அயல் நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தைக் கடந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஆபிரிக்க நாடான சூடானில் கடந்த 2023ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. எனவே அந்நாட்டில் இருந்து மக்கள் வெளியேறி அயல் நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.

இதேவேளை, அயல் நாடான சாட் நாட்டடில் மட்டும் 8 இலட்சம் பேர் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.

ஆனால், நிதிப்பற்றாக்குறை காரணமாக போதுமான தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் கிடைக்காமல் அகதிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மனிதகுலத்தின் மிகப்பெரிய நெருக்கடியை இலட்சக்கணக்கான சூடான் அகதிகள் எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அகதிகள் அமைப்பின் அதிகாரி தெரிவித்தார்.

The post சூடான் அகதிகள் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஐ.நா தகவல்! appeared first on Vanakkam London.

By admin