• Thu. Nov 13th, 2025

24×7 Live News

Apdin News

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை ஏற்படுமா?

Byadmin

Nov 13, 2025


சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் நிரம்பாதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில், உயர் சிகிச்சை மருத்துவ படிப்புகளில் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) சேர்க்கை குறைவாக உள்ளது. வாழ்க்கை – வேலை சமநிலை, ஊதியம், பதவி உயர்வு, மற்றும் கலந்தாய்வு நடைமுறையில் சிக்கல் ஆகிய காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நமது இருதயத்தில் ஏதேனும் கோளாறு என்றால் இருதயவியல் நிபுணரை சந்திக்கிறோம். மூளையில் பிரச்னை என்றால் நரம்பியல் மருத்துவரை அணுகுகிறோம். இது போல, துறை சார்ந்த நிபுணத்துவம் பெறுவதற்கான மருத்துவ படிப்புக்கான இடங்கள் தமிழ்நாட்டில் காலியாக உள்ளன.

அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்களுக்கான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மருத்துவத்தில் உயரிய படிப்புகளில் ஒன்றான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவத்தை படிப்பதில் ஏன் மருத்துவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை?

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே இப்படியான நிலை உள்ளது. வேலை-வாழ்க்கை சமநிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்த தலைமுறையினரின் விருப்பங்கள் வேறு மாதிரியாக உள்ளனவா? உயரிய மருத்துவ படிப்பை படிக்கும் மருத்துவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறதா? ஆகிய கேள்விகளும் எழுகின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எத்தனை இடங்கள் நிரம்பவில்லை

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்காக (இருதயவியல் , சிறுநீரகவியல், குடல் மருத்துவம், நரம்பியல் உள்ளிட்ட துறை சார்ந்த நிபுணத்துவம் அளிக்கும் படிப்புகள். இவை முதுநிலை மருத்துவ படிப்புக்கு பிறகு, மேற்கொள்ளப்படும் படிப்பாகும்) நடைபெற்ற கலந்தாய்வில் அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் சுமார் 50% இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன.

By admin