• Sun. Dec 21st, 2025

24×7 Live News

Apdin News

செங்கிஸ் கான் இந்தியாவிற்கு அருகில் வந்தும் அதைக் கைப்பற்றாதது ஏன்?

Byadmin

Dec 21, 2025


செங்கிஸ் கான்

பட மூலாதாரம், Getty Images

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, கருங்கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரை பரந்து விரிந்த பிரமாண்டமான சாம்ராஜ்யத்தை மங்கோலிய நாடோடி ஒருவர் நிறுவினார். தெமூஜின் என்ற இயற்பெயர் கொண்ட அந்த நாடோடி, பேரசரர் செங்கிஸ் கான் என்று உலகம் முழுவதும் அறியப்பட்டார்.

புகழ்பெற்ற பைக்கால் ஏரியின் கிழக்கே கரடுமுரடான பகுதியில் நாடோடி ஒருவரின் குழந்தையாக பிறந்தார் தெமூஜின். பிறக்கும்போது ​​அவரது உள்ளங்கையில் சிவப்பு மச்சம் ஒன்று இருந்ததாவும், அது அவர் எதிர்காலத்தில் சிறந்த வெற்றியாளராக உருவாகுவார் என்பதற்கான அடையாளமாக கருதப்பட்டதாகவும் ‘The Secret History of the Mongols’ என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள்ளது.

தெமூஜின் சிறுவனாக இருந்தபோதே, எதிரிகள் நச்சு கொடுத்ததால் அவரது தந்தை கொலை செய்யப்பட்டதால் அவர் மிகச் சிறிய வயதிலேயே ஆதரவற்றவராக ஆனார்.

செங்கிஸ் கான் என்ற பெயர், அவரை இஸ்லாமியர் என்று பலர் நினைக்கக் காரணமாக இருக்கிறது. உண்மையில், கான் என்பது மரியாதைக்குரிய பட்டப்பெயர் ஆகும். மங்கோலியரான செங்கிஸ்கான், வானத்தை வணங்கும் பாரம்பரியத்தைக் கொண்ட ஷாமனிசத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்.

கல்வியறிவு இல்லாத செங்கிஸ் கான் தனது ஆரம்பகால வாழ்க்கையை அவமானம் மற்றும் வறுமையில் கழித்தார்.

By admin