• Sat. Aug 16th, 2025

24×7 Live News

Apdin News

செங்கோட்டையில் பாகிஸ்தானுக்கு நேரடியாகவும் அமெரிக்காவுக்கு மறைமுகமாகவும் மோதி கொடுத்த செய்தி என்ன? – அலசும் நிபுணர்கள்

Byadmin

Aug 16, 2025


நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2025 ஆகஸ்ட் 15 அன்று, டெல்லி செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி

2025 ஆகஸ்ட் 15 அன்று, டெல்லி செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கடுமையான நிலைப்பாடு, தற்சார்பின் முக்கியத்துவம், ஜிஎஸ்டியில் மாற்றங்கள், வேலைவாய்ப்புத் திட்டம் அறிவிப்பு என பல விஷயங்களை பற்றி பேசினார்.

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளைப் பற்றி பிரதமர் நேரடியாக எதையும் குறிப்பிடவில்லை, மாறாக தற்சார்பு குறித்து வலியுறுத்தினார். அரசியல் நிபுணர்களின் கூற்றுப்படி, இது பிரதமர் மோதியின் மறைமுக செய்தி ஆகும்.

மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களான அதிதி ஃபட்னிஸ் மற்றும் ஷரத் குப்தாவின் கூற்றுப்படி, பிரதமர் மோதியின் சுதந்திர தின உரை, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது பல வழிகளில் மாறுபட்டிருந்தது.

இந்த முறை, நீண்டகாலத் திட்டங்களுக்குப் பதிலாக, தற்போதைய சவால்கள் மற்றும் சூழ்நிலைகளில் பிரதமர் அதிக கவனம் செலுத்தினார் என்று அவர் நம்புகிறார்.

By admin