இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, படிவங்களைப் பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காண, வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களைக் கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும், இன்று (நவ.18) முதல் 25-ம் தேதி வரை 8 நாட்களுக்கு மாநகராட்சிக்கு உட்பட்ட 947 வாக்குச்சாவடி மையங்களிலும், காலை 10 முதல் மாலை 6 மணி வரை வாக்காளர் உதவி மையங்கள் செயல்படவுள்ளன.
இப்பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு முடிக்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்களின் (பிஎல்ஏ) பங்கு இன்றியமையாதது. அரசியல் கட்சிகளின் முழுமையான பங்களிப்பை உறுதிசெய்ய, பிஎல்ஏக்கள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு முன்பு வரை நாள்தோறும் அதிகபட்சம் 50 நிரப்பப்பட்ட படிவங்களைப் பெற்று வழங்க தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.