• Wed. Mar 26th, 2025

24×7 Live News

Apdin News

சென்னையில் ஒரே நேரத்தில் 6 இடங்களில் தங்கச் சங்கிலி பறிப்பு – வட மாநில கும்பல் சிக்கியது எப்படி?

Byadmin

Mar 26, 2025


சென்னையில் ஒரே நேரத்தில் 6 இடங்களில் தங்கச் சங்கிலி பறிப்பு - வட மாநில கும்பல் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், HANDOUT

சென்னையில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேரை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்துள்ளதாக, சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

கைதான நபர்கள் வட மாநிலத்தவர்கள் என்றும் ஏற்கெனவே இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் என்ன நடந்தது? குற்றத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்களைக் காவல்துறை கைது செய்தது எப்படி?

சென்னை சைதாபேட்டை உள்ளிட்ட ஆறு இடங்களில் செவ்வாய்க் கிழமையன்று (மார்ச் 25) காலை ஆறு மணியளவில் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்ததாக சென்னை பெருநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

By admin