• Sat. Aug 2nd, 2025

24×7 Live News

Apdin News

சென்னையில் ‘சிங்கா 60’ கலைத் திருவிழா தொடங்கியது: பார்வையாளர்களை வியக்க வைத்த ஓவியக் கண்காட்சி | singa 60 art festival commenced in chennai

Byadmin

Aug 2, 2025


சென்னை: சிங்​கப்​பூரின் 60-வது தேசிய தினத்தை முன்​னிட்டு ‘சிங்கா 60’ கலைத் திரு​விழா சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. முதல் நாள் நிகழ்ச்​சி​யில் இடம்​பெற்ற இந்​தி​ய-சிங்​கப்​பூர் ஓவிய, சிற்​பக்​கலைஞர்​களின் படைப்​பு​கள் பார்​வை​யாளர்​களை வியக்க வைத்​தன.

சிங்​கப்​பூர் நாட்​டின் 60-வது தேசிய தினம் விரை​வில் கொண்​டாடப்பட உள்ள நிலை​யில், ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்​றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்​னை​யில் ‘சிங்கா 60’ என்ற பிரம்​மாண்ட கலை திரு​விழாவை 10 நாட்​கள் நடத்​துகின்​றன. இசை, நாடகம், ஆவணப் ​படம், அரசி​யல், கலை, கலாச்​சா​ரம், சமையல், குழு விவாதம், கருத்​தரங்​கம் என பல்​சுவை நிகழ்ச்​சிகளை உள்​ளடக்​கிய இத்​திரு​விழா அடை​யாறு பத்​ம​நாபா நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரி​யில் நேற்று கோலாகல​மாக தொடங்​கியது.

இக்​கண்​காட்​சியை சிங்​கப்​பூர் துணை தூதர் எட்​கர் பாங்க் தொடங்​கி​வைத்து பார்​வை​யிட்​டார். அவர் பேசும்​போது, “சிங்​கப்​பூர் தனது 60-வது தேசிய தினத்தை கொண்​டாடும் வேளை​யில் இந்​தி​யா-சிங்​கப்​பூர் இரு நாடு​களுக்கு இடையி​லான 60 ஆண்டு கால ராஜ்ஜிய உறவு​களை கொண்​டாடும் வகை​யில் இந்​நிகழ்ச்சி நடத்​தப்​படு​வது மகிழ்ச்சி அளிக்​கிறது. இதன்​மூலம் இரு நாடு​களுக்கு இடையி​லான உறவு பலப்​படும் என்று குறிப்​பிட்​டார்.

முன்​ன​தாக ‘இந்து தமிழ் திசை ‘இயக்​குநர் லட்சுமி ஸ்ரீநாத் வரவேற்​று பேசுகையில், ‘‘இந்த நிகழ்ச்சி இந்திய-சிங்கப்பூர் நாடுகளின் கலாச்சார பரிமாற்றங்களின் கொண்டாட்டமாக அமைந்திருக்கும். இந்த கண்காட்சியில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்களின் அற்புதமான படைப்புகளை பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’’என்று குறிப்பிட்டார். தொடக்​க​விழா​வில் ‘இந்து தமிழ் திசை’ இயக்​குநர்​கள் விஜயா அருண், அகிலா விஜய் ஐயங்கார், லாவண்யா வேணுகோபால், போரம் ஆர்ட் கேலரி இயக்​குநர் ஷாலினி பிஸ்​வஜித் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

முதல் நாளில் ‘நகரத்​தின் சிந்​தனை​கள்’ என்ற பெயரில் சிறப்பு ஓவிய-சிற்ப கண்​காட்சி இடம்​பெற்​றது. இந்த கண்​காட்​சி​யில் புகழ்​பெற்ற ஓவிய – சிற்ப கலைஞர்​களான சிங்​கப்​பூரைச் சேர்ந்த குமாரி நாகப்​பன், பி. ஞானா,மகாலட்​சுமி கண்​ணப்​பன், ஆர்​யன் அரோ​ரா,இந்​தி​யா​வைச் சேர்ந்த கவிதா பத்ரா உள்​ளிட்ட கலைஞர்​களின் படைப்​பு​கள் இடம்​பெற்​றன. தத்​ரூப​மாக வரையப்​பட்ட ஓவி​யங்​களை​யும், கலைந​யத்​தோடு வடிவ​மைக்​கப்​பட்ட சிற்​பங்​களை​யும் பார்​வை​யாளர்​கள் கண்டு வியந்​தனர். இந்த கண்​காட்சி ஆகஸ்ட்30-ம் தேதி வரை நடை​பெறும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. கண்​காட்​சியை தொடர்ந்​து, ஓவிய கலைஞர்​கள், சிற்ப கலைஞர்​கள் பங்​கேற்ற குழு விவாத நிகழ்ச்சி நடந்​தது. இந்​நிகழ்வை டெல்​லியைச் சேர்ந்த ஓவி​யம் மற்​றும் சிற்ப கலைஞ​ரான பார்​வதி நாயர் நெறிப்​படுத்​தி​னார்.

இந்​நிகழ்ச்​சிக்​கான பங்​கு​தா​ரர்​களாக சிங்​கப்​பூர் தூதரகம், டிபிஎஸ் வங்​கி​யும் துணை பங்​கு​தா​ரர்​களாக டிவிஎஸ், லார்​சன் அண்ட் டூப்​ரோ, ஓலம் அக்​ரி, டிரான்​ஸ்​வோர்ல்​டு, நிப்​பான் பெயின்ட் அண்ட் எச்​ஒய்​சி, ராம்​ராஜ் காட்​டன், லலிதா ஜுவல்​லரி,ரெசிடென்சி டவர்​ஸ், போரம் ஆர்ட் கேலரி, மிஸ்​டர் ஓங், நாசி அண்ட் மீ, பம்​கின் டேல்​ஸ், மேவெண்​டோயர், சிங்​கப்​பூர் தமிழ் முரசு நாளிதழ் ஆகிய​வை​யும் உள்​ளன.

2-வது நாளான இன்று (சனிக்​கிழமை) மாலை 6.30 மணிக்கு ராஜாஅண்​ணா​மலைபுரம் துர்​கா​பாய் தேஷ்​முக் சாலை​யில் அமைந்​துள்ள ராஜரத்​தினம் கலை​யரங்​கில் ‘முச்​சந்​தி’ என்ற தலைப்​பில் நாடகம் அரங்​கேற்​றப்​படு​கிறது. இந்​நாடகத்தை சிங்​கப்​பூரைச்​ சேர்ந்​த அகம்​ தியேட்​டர்​ லேப்குழுவினர்​ அரங்​கேற்​றுகிறார்​கள்​.



By admin