• Wed. Nov 19th, 2025

24×7 Live News

Apdin News

சென்னையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக 947 வாக்குச்சாவடிகளில் உதவி மையம்: மக்கள் பங்கேற்று சந்தேகங்களை கேட்டறிந்தனர்

Byadmin

Nov 19, 2025


சென்னை: சென்​னை​யில் உள்ள 947 வாக்​குச்​சாவடிகளில் வாக்​காளர் சிறப்பு திருத்​தம் தொடர்​பான வாக்​காளர் உதவி மையம் நேற்று நடை​பெற்​றது. தமிழகம் முழு​வதும் கடந்த 4-ம் தேதி முதல் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், இப்​பணி​களை மேற்​கொள்​வ​தில் பொது​மக்​கள் பல்​வேறு சிரமங்​களை சந்​தித்து வரு​வதை கருத்​தில் கொண்​டு, சென்னை மாநக​ராட்சி சார்​பில், வாக்​காளர் சிறப்பு திருத்​தம் தொடர்​பாக வாக்​காளர் உதவி மையம் நவ.18-ம் தேதி முதல் நடத்​தப்​படும் என அறிவிக்​கப்​பட்​டது.

வாக்​காளர்​களுக்கு ஏற்​படும் சந்​தேகங்​களுக்கு தீர்வு காணும் வகை​யில், இந்த உதவி மையங்​களுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. அதன்​படி, சென்னை மாநகரம் முழு​வதும் வாக்​குச்​சாவடி மையங்​களாக உள்ள பள்​ளி​களில் நேற்று காலை​யில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தத்​துக்​கான உதவி மையங்​கள் தொடங்கி பணி​கள் நடை​பெற்​றன.

By admin