• Mon. Dec 15th, 2025

24×7 Live News

Apdin News

சென்னையில் ஸ்குவாஷ் உலகக் கோப்பை: இந்திய அணி சாம்பியன்

Byadmin

Dec 15, 2025


இந்தியா - ஸ்குவாஷ் உலகக் கோப்பை சாம்பியன்

பட மூலாதாரம், India Squash

சென்னையில் நடந்த எஸ்டிஏடி (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்) ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்றிருக்கிறது இந்திய அணி. ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) நடந்த இறுதிப் போட்டியில் ஹாங் காங் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இறுதிப் போட்டியில் 3-0 என இந்தியா வென்றது.

ஸ்குவாஷ் உலகக் கோப்பையில் இதுதான் இந்தியாவின் இரண்டாவது பதக்கம்; முதல் தங்கம். இதற்கு முன்பு 2023 உலகக் கோப்பையில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்திருந்தது.

இந்த வெற்றி இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டின் முன்னேற்றத்துக்கு நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உலகக் கோப்பையில் இந்தியா பதக்கம் வென்றது எப்படி?

ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025: ஃபார்மட் என்ன?

டிசம்பர் 9 தொடங்கிய இந்த உலகக் கோப்பையில், மொத்தம் 12 அணிகள் கலந்துகொண்டன. அவை, 3 அணிகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இதில் இந்திய அணி ஸ்விட்சர்லாந்து மற்றும் பிரேசில் அணிகளோடு பி பிரிவில் இடம்பெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.

By admin