• Thu. Aug 28th, 2025

24×7 Live News

Apdin News

சென்னையில் ஸ்ரீதேவியின் சொத்துக்கு உரிமை கோரும் 3 பேர் – வாரிசு சான்றிதழுடன் வந்ததால் வழக்கு

Byadmin

Aug 28, 2025


ஸ்ரீதேவி, போனி கபூர், வாரிசு சான்றிதழ், நிலம், நில மோசடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடந்த 1988 ஆம் ஆண்டு மறைந்த நடிகை ஸ்ரீதேவி, சுமார் 1.34 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். (கோப்புப் படம்)

‘மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழின் அடிப்படையில் நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்கு மூன்று பேர் உரிமை கோருகின்றனர். இதற்காக பல்வேறு சிவில் வழக்குகளைத் தொடுத்து பெரும் பிரச்னையை ஏற்படுத்துகின்றனர்’ – சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் தொடர்ந்த வழக்கின் மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மனு மீது நான்கு வாரங்களில் முடிவெடுக்குமாறு தாம்பரம் தாசில்தாருக்கு ஆகஸ்ட் 25 அன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கில் என்ன நடந்தது? நில மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடந்த 1988 ஆம் ஆண்டு மறைந்த நடிகை ஸ்ரீதேவி, சுமார் 1.34 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். சம்பந்த முதலியார் என்பவரிடம் இருந்து வாங்கப்பட்ட இந்த நிலத்தை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக போனி கபூர் தரப்பினர் பயன்படுத்தி வருகின்றனர்.

By admin