• Thu. Aug 14th, 2025

24×7 Live News

Apdin News

சென்னை: இரவோடு இரவாக அப்புறப்படுத்தப்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசின் புதிய அறிவிப்பு குறித்து சொல்வது என்ன?

Byadmin

Aug 14, 2025


காணொளிக் குறிப்பு, வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட தூய்மை பணியாளர்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திவந்த தூய்மை பணியாளர்கள், புதன்கிழமையன்று வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு என சில புதிய திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டங்கள் அவர்களுக்கு ஆறுதல் தருமா?

சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்களும் ஆகஸ்ட் 13ஆம் தேதி நள்ளிரவில் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமையன்று தடைவிதித்ததோடு, அவர்களை அந்த இடத்திலிருந்து அகற்றவும் உத்தரவிட்டது.

By admin