• Sun. Oct 19th, 2025

24×7 Live News

Apdin News

சென்னை கனமழையை எதிர்கொள்ள தயாரா? மழைநீர் வடிகால், முன்னேற்பாடுகள் பற்றி பிபிசி கள ஆய்வு

Byadmin

Oct 19, 2025


சென்னை கனமழையை எதிர்கொள்ள தயாரா?
படக்குறிப்பு, சென்னை கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனியில் உள்ள சாலையின் நிலை

“மழை வந்தாலே வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். கடந்த வருடம்போல இந்த வருடமும் நீரை வெளியேற்ற மோட்டார்களை வைத்துள்ளனர். மழைநீர் வடிகால்களை ஓரளவு கட்டி முடித்துவிட்டதால் நீர் தேங்காது என நம்புகிறோம்” எனக் கூறுகிறார், வேளச்சேரியில் மளிகைக் கடை நடத்தி வரும் கவிதா.

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின் போது கடைக்குள் நீர் புகுந்ததால் சுமார் 2 லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக அக்டோபர் 16-ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. கனமழையை எதிர்கொள்வதற்கு படகுகளும் நீரை வெளியேற்றும் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையடைந்துவிட்டதாக அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். உண்மையில் பருவமழையை எதிர்கொள்ள சென்னை தயார்நிலையில் உள்ளதா?



By admin