• Sun. May 4th, 2025

24×7 Live News

Apdin News

சென்னை, கன்னியாகுமரியில் எரிவாயு திட்டம்: ‘அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது’ என ஸ்டாலின் கூறுவது ஏன்? திட்டத்தால் ஆபத்தா?

Byadmin

May 3, 2025


சென்னை, கன்னியாகுமரி, எரிவாயு திட்டம், ஓஎன்ஜிசி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மற்றும் சென்னையில் நான்கு கடல்சார் தொகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது

திறந்தவெளி பரப்புரிமை கொள்கை (Open Acreage Licensing Policy) அடிப்படையில் இந்த உரிமத்தை ஓஎன்ஜிசிக்கு ஹைட்ரா கார்பன் இயக்குநரகம் (DGH) வழங்கியுள்ளது.

இத்திட்டத்தால் கடல் வளமும் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனக் கூறி தமிழ்நாடு அரசும் மீனவ அமைப்புகளும் எதிர்க்கத் தொடங்கியுள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியாவில் 28 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான சர்வதேச ஏலத்தை இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தது.



By admin