• Fri. Jun 6th, 2025

24×7 Live News

Apdin News

சென்னை கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் திடீர் போராட்டம் – என்ன பிரச்னை? இன்றைய முக்கியச் செய்தி

Byadmin

Jun 6, 2025


இன்றைய முக்கியச் செய்திகள், கிளாம்பாக்கம், சென்னை

இன்றைய (06/06/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நேற்று முன்தினம் இரவுக்கு மேல் இல்லாததால், 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர் என்றும் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பயணிகள், காவல் துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது என்றும் இந்து தமிழ் திசை நாளிதழின் செய்தி கூறுகிறது.

அந்தச் செய்தியின்படி, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்ற புகார் இருந்துவருகிறது.

நேற்றுமுன்தினம் இரவு 9 மணிக்கு மேல், தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், கோவை, தூத்துக்குடி, திருக்கோவிலூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, தேவகோட்டை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

By admin