• Sun. Feb 2nd, 2025

24×7 Live News

Apdin News

சென்னை: சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல், போக்குவரத்துக் காவலர் கைது – முக்கிய செய்திகள்

Byadmin

Feb 2, 2025


சென்னை முக்கிய செய்திகள், தமிழ் நாடு செய்திகள், தமிழக செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

இன்றைய (பிப்ரவரி 02, 2025) தமிழ் நாளிதழ்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் வெளியிட்டுள்ள முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்துறையைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களுடைய 14 வயது மகள் திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும், “தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்தச் சிறுமி, அவருடைய 16 வயது ஆண் நண்பருடன் கடலூரில் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மீட்டு சிறுவனைக் கைது செய்தனர். இதற்குத் துணையாக இருந்த அவரது தாயும் கைது செய்யப்பட்டார்.

By admin