• Sat. Mar 1st, 2025

24×7 Live News

Apdin News

சென்னை: சொகுசு வீடுகள் விற்பனை அதிகரித்த அளவுக்கு சாதாரண வீடுகளின் விற்பனை உயராதது ஏன்?

Byadmin

Mar 1, 2025


தமிழ்நாடு, சென்னை, ரியல் எஸ்டேட்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில், சொகுசு வசதிகள் கொண்ட விலையுயர்ந்த வீடுகளுக்கான கிராக்கி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. அதே சமயம், சாதாரண வீடுகள் விற்பனையில் பெரிதாக முன்னேற்றம் இல்லை. இந்தப் போக்கு வீட்டுச் சந்தை நெருக்கடியில் இருப்பதை உணர்த்துவதாகவும், அதே சமயம் சொகுசு வீடுகளுக்கான மோகம் ஒரு புதிய போக்கு என்றும் கூறுகிறார்கள் வல்லுநர்கள்.

சென்னையில் அண்ணா சாலை , அடையார் போன்ற பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான உயர் தர சொகுசு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு, சென்னை, ரியல் எஸ்டேட்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சென்னையில் வளர்ந்து வரும் சொகுசு வீடு சந்தை

இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் அமைப்பின் தமிழ்நாடு தலைவர் இளங்கோவன் கூறும் போது “முதல் நிலை நகரங்களில் உயர் தர சொகுசு வசதிகள் கொண்ட பிரீமியம் வீடுகளின் விற்பனை அதிகரிக்கிறது. சென்னையில் முதல் முறையாக தற்போது பிராண்டட் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு நட்சத்திர ஓட்டலுடன் இணைந்த குடியிருப்புகளாக கட்டப்படும் இந்த வீடுகளில் நட்சத்திர ஓட்டலுக்கான வசதிகள் இருக்கும். வீட்டை விற்க வேண்டும் என்று நினைத்தால், ஓட்டலுக்கு குத்தகைக்கு விடலாம், மீண்டும் அங்கு வந்து தங்க வேண்டும் என்றால், பராமரிப்பு கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இதேபோன்று மதுரையில் 300 வீடுகள் கொண்ட பிராண்டட் குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன” என்று கூறினார்.

பிரபலங்கள், நடிகர் – நடிகைகள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் இதுபோன்ற வீடுகளை விரும்புவதாக கூறும் அவர், அதிசொகுசு வீடுகளுக்கான பகுதிகளும் அதிகரித்திருப்பதாக கூறினார், “சென்னையில் ஆழ்வார்பேட்டை, போயஸ் தோட்டம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே பத்து கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் வீடுகள் இருந்துவந்துள்ளன. தற்போது அண்ணா சாலை, அடையார், நுங்கம்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் பத்து கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையிலான வீடுகள் கொண்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

By admin