• Tue. Sep 16th, 2025

24×7 Live News

Apdin News

சென்னை: நாய்கடிக்கு சிகிச்சை பெற்றும் 40 நாட்களுக்குப் பிறகு பலி – ரேபிஸ் தடுப்பூசி முறையை விளக்கும் நிபுணர்

Byadmin

Sep 16, 2025


ரேபிஸ் தொற்று ஏற்பட்டு முகமது நஸ்ருதீன் என்பவர் உயிரிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

சென்னை ராயப்பேட்டை பகுதியில் வெறிநாய் கடித்த பிறகு சிகிச்சை பெற்றும், 40 நாட்களுக்குப் பிறகு நோய் தாக்கி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? வெறிநாய்க் கடிக்கு தடுப்பூசிகளை எப்படி முறையாகச் செலுத்துவது?

ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஏ. முகமது நஸ்ருதீன். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரை கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி மீர் சாகிப் பேட்டை மார்க்கெட் அருகே அவரது வலது காலில் வெறி நாய் ஒன்று கடித்திருக்கிறது.

இதையடுத்து அவர் ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரேபிஸ் தொற்று உறுதியானதை அடுத்து தனியறையில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையிலும் அவர் செப்டம்பர் 14-ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

By admin