• Wed. Jun 25th, 2025

24×7 Live News

Apdin News

சென்னை, புறநகரில் இயக்கப்படும் மின் ரயில்களில் பெட்டிகள் அதிகரிப்பு | coaches Increases in electric trains Chennai and suburban areas

Byadmin

Jun 25, 2025


சென்னை: சென்னை, புறநகரில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் தினமும் 12 லட்சம் பேர் ரயிலில் பயணிக்கின்றனர். இதில் சுமார் 8.6 லட்சம் பயணிகள் புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 9 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மற்றும் சென்ட்ரல் கும்மிடிபூண்டி, சூலூர்பேட்டை, கடற்கரை – செங்கல்பட்டு பிரிவு ரயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 4 லட்சம் கூடுதல் பயணிகளுக்கு இடவசதி கிடைக்கும். இதனால் கூட்ட நெரிசல் மிக்க நேரங்களில் நெரிசல் குறைவதோடு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin