சென்னை: சென்னை சென்ட்ரல் – கூடூர் மார்க்கத்தில், பொன்னேரி – கவரைப்பேட்டை இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 19 மின்சார ரயில்களின் சேவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு ஆக.14, 16, 18 ஆகிய தேதிகளில் காலை 10.30, முற்பகல் 11.35 மணி, சென்னை சென்ட்ரல் -சூலூர்பேட்டைக்கு காலை 10.15, நண்பகல் 12.10, மதியம் 1.05, சூலூர்பேட்டை – சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 1.15, பிற்பகல் 3.10, இரவு 9 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.40, நண்பகல் 12.40, கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரைக்கு காலை 10.55, கும் மிடிப்பூண்டி – சென்னை சென்ட்ரலுக்கு நண்பகல் 12.00, பிற்பகல் 2.30, 3.15, சூலூர்பேட்டை – நெல்லூருக்கு பிற்பகல் 1.15, நெல்லூர் – சூலூர்பேட்டைக்கு மாலை 6.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையேயும், கும்மிடிப்பூண்டி – தாம்பரத்துக்கு பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை இடையேயும் பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
ரத்து செய்யப்படும் மின்சார ரயில்களுக்கு பதிலாக, அதேநாட்களில், சென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து பொன்னேரி இடையே தலா ஒரு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும். மீஞ்சூர்- சென்னை சென்ட்ரல் இடையே பயணிகள் சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது.