• Sat. Oct 12th, 2024

24×7 Live News

Apdin News

சென்னை ரயில் விபத்து: 2 ரயில்கள் மோதியது எப்படி? விபத்து நடந்த இடத்தில் என்ன நடக்கிறது? நேரலை

Byadmin

Oct 12, 2024


சென்னை அருகே ரயில் விபத்து
படக்குறிப்பு, சென்னை அருகே ரயில்கள் மோதியதில் பெட்டிகள் கவிழ்ந்து கிடக்கும் காட்சி

சென்னை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் சுமார் 13 பெட்டிகள் தடம்புரண்டன. ஒரு பெட்டியில் தீப்பிடித்தது. விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்து காரணமாக அவ்வழியே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்து நேரிட்டது எப்படி?

பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள் உரிய இடத்திற்குச் செல்வதற்கான மாற்று ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்து காரணமாக, அவ்வழியேயான ரயில் சேவைகளிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.

சென்னை அருகே ரயில் விபத்து
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

2 ரயில்கள் மோதி விபத்து

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ள கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் இரவு சுமார் 8.30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. அங்கேயுள்ள லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் பின்பிறமாக மோதியுள்ளது. இதில், 12 அல்லது 13 பெட்டிகள் தடம்புரண்டதாக ரயில்வே கூறியுள்ளது. ஒரு பெட்டியில் தீப்பிடித்தது. பயணிகள் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

By admin