• Sat. Nov 15th, 2025

24×7 Live News

Apdin News

செயின் பறிப்பு வழக்கில் போலீஸ் நஷ்டஈடு கொடுக்க உத்தரவு – இது குறித்து சட்டம் சொல்வது என்ன?

Byadmin

Nov 15, 2025


திருச்சி: 8 சவரன் நகை திருட்டுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு: நீதிமன்ற உத்தரவு யாருக்கெல்லாம் பொருந்தும்? இழப்பீட்டைப் பெறும் வழி என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

தனது எட்டு சவரன் நகை திருடப்பட்ட சம்பவத்தில், குற்றத்தில் ஈடுபட்ட நபர்களைக் காவல்துறை கண்டறியாததால் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு 1 லட்ச ரூபாயை வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டுள்ளது.

“தனி நபர்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபட்டாலும் அது அரசுக்கு எதிரான குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என, சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

குற்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டோர் இழப்பீடு பெறுவது தொடர்பாக சட்டம் சொல்வது என்ன? எந்தெந்த வழக்குகளில் இழப்பீடு கோரலாம்?

திருச்சி மாவட்டம், சிந்தாமணியைச் சேர்ந்த ஜோன் ஆன்ட்ரூஸ் பூர்ணிமா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், ‘2022 ஆம் ஆண்டு திருச்சியில் இருந்து அரசுப் பேருந்தில் கீரனூருக்குப் பயணம் செய்தேன். அப்போது தனது எட்டு சவரன் நகை திருடு போய்விட்டது. இதுதொடர்பாக கீரனூர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தேன். தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை’ எனக் கூறியிருந்தார்.

By admin