• Fri. Oct 31st, 2025

24×7 Live News

Apdin News

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க மாநகராட்சி நடவடிக்கை | Corporation to impose Rs 5000 fine for not obtaining license for pets

Byadmin

Oct 31, 2025


சென்னை: சென்னை மாநகரில் வீடு​களில் வளர்க்​கப்​படும் செல்​லப் பிராணி​களுக்கு மாநக​ராட்​சி​யிடம் உரிமம் பெறா​விட்​டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்​கும் வகை​யில் நேற்று நடை​பெற்ற மாமன்ற கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்சி மன்​றக்கூட்​டம் மேயர் ஆர்​.பிரியா தலை​மை​யில், துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் முன்​னிலை​யில் ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் அதி​முக கவுன்​சிலர் கே.பி.கே.சதீஷ் பேசும்​போது, “நெம்​மேலி குடிநீர் திட்​டத்​தை, முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா கொண்டு​ வந்​தார்” என பேசி​னார். அப்​போது திமுக கவுன்​சிலர்​கள், திமுக ஆட்​சி​யில்​தான் அடிக்​கல் நாட்​டப்​பட்​டது என்​றனர். இதனால் அதி​முக, திமுக கவுன்​சிலர்​களிடையே கடும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​ட​தால், கே.பி.கே.சதீஷின் மைக் அணைக்​கப்​பட்​டது.

இதைக் கண்​டித்து அதி​முக கவுன்​சிலர்​கள் வெளிநடப்பு செய்​தனர். தொடர்ந்​து, சென்னை மாநக​ராட்சி பகு​தி​களில் வளர்க்கப்படும் செல்​லப் பிராணி​களான நாய்​கள் மற்​றும் பூனை​களுக்கு உரிமம் பெறு​வதை கட்​டாய​மாக்​க​வும், நவ.24-ம் தேதி​முதல் உரிமம் பெறாத செல்​லப் பிராணி​களை, வீடு வீடாக ஆய்வு செய்து கண்​டறிய​வும், செல்​லப் பிராணி​களுக்கு உரிமம் பெறாத உரிமை​யாளர்​களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்​க​வும், பூங்​காக்​கள், நடை​பாதைகள் மற்​றும் பொது​மக்​கள் கூடும் பிற பகு​தி​கள் உள்​ளிட்ட பொது இடங்​களில் நாய்​களுக்கு கழுத்​துப் பட்டை இன்றி அழைத்து வரும் உரிமை​யாளர்​களுக்கு ரூ.500 அபராதம் விதிக்​க​வும், அபராதத்தை கோட்ட சுகா​தார ஆய்​வாளர் மற்​றும் துப்​புரவு ஆய்​வாளர் மூலம் வசூலிக்க அனு​மதி அளித்​தும் மன்ற கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

சென்​னை​யில் ரூ.5.19 கோடி​யில் 2 லட்​சம் நாய்​களுக்கு மைக்ரோ சிப் பொருத்​துதல், அந்த சிப்​களில் உள்ள தரவு​களை எடுக்​கும் 80 உபகரணங்​களை வாங்​குதல், அவற்றை மேலாண்மை செய்​வதற்​கான மென்​பொருள் உரு​வாக்​கி, 5 ஆண்​டு​களுக்கு பயன்​படுத்தி பராமரித்​தல் ஆகிய​வற்றை மேற்​கொள்ள தனி​யார் நிறு​வனத்​துக்கு பணி ஆணை வழங்​க​வும் கூட்​டத்​தில் அனு​மதி அளிக்கப்பட்டது.

மாநக​ராட்​சி​யில் 29,455 தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு தின​மும் 3 வேளை உணவு வழங்​கும் பணி​யை, 3 ஆண்​டு​களுக்கு ரூ.186.94 கோடி​யில் தனி​யார் நிறு​வனம் ஒப்​பந்த அடிப்​படை​யில் மேற்​கொள்ள அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. மயி​லாப்​பூர் மந்​தைவெளி பாக்​கத்​தில் உள்ள கிழக்கு வட்​டச் சாலைக்கு ‘சீர்​காழி கோவிந்​த​ராஜன் சாலை’ என பெயரிடக் கோரியதற்கு மன்​றத் தீர்​மானம் நிறைவேற்ற அரசின் அனு​மதி பெறப்​பட்​டுள்​ளது. அதற்கு மன்​றத்​தில் அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. மொத்​தம்​ 72 தீர்​மானங்​கள்​ நிறைவேற்​றப்​பட்​டன.



By admin