யார் சொன்னாலும் கேளாதா
செல்ஃபி மோகம்
எப்போதும் அடங்காதா இந்த
டிக்டக் தாகம்
என்னன்னு சொல்லி தடுப்பது
தடை போடுவது
இதுதான் உலகம்னு கிடக்குது
புத்தி கெட்டு
சீறும் பாம்போடு ரீல்ஸ்
கடிக்கும் நாயோடு ரீல்ஸ்
கடல் நடுவே ரீல்ஸ்
மலைமுகடில் ரீல்ஸ்
பார்க்கும் திசையெங்கும் ரீல்ஸ்
போகும் இடமெல்லாம் ரீல்ஸ்
பறக்கும் பைக்கில் ரீல்ஸ்
எங்கும் எதிலும் ரீல்ஸ் ரீல்ஸ்
இந்த செல்ஃபி மோகத்தால்
எத்தனை உயிர்கள் பறிபோகின்றன
எத்தனை பிஞ்சு உயிர்கள்
உயிரை மாய்க்கின்றன
எப்போ நீங்க திருந்தப் போறீங்க
எப்போ நீங்க வருந்தப் போறீங்க
இந்த பைத்தியக்காரத் தனத்தை அடியோடு
எப்போ நீங்க கை விடப் போறீங்க.
வட்டக்கச்சி
எஸ்.பி.லக்குணா சுஜய்
The post சொல்வழி கேட்காதா செல்ஃபி மோகம் | எஸ்.பி.லக்குணா சுஜய் appeared first on Vanakkam London.