• Sat. Jul 18th, 2026

24×7 Live News

Apdin News

சோனம் வாங்சுக்: உண்ணாவிரதம் இருப்பவரை வலுக்கட்டாயமாக அகற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளதா?

Byadmin

Jul 18, 2026


அபிஜீத் திப்கே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காக்கரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே (இடது), ஜூலை 18, 2026 அன்று புது டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை சனிக்கிழமை அதிகாலை ஜந்தர் மந்தரில் இருந்து டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக அகற்றி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி, தனது கணவர் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.

தனது சம்மதம், குடும்பத்தினரின் சம்மதம் மற்றும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலையைக் கண்காணிக்கும் மருத்துவர்களின் அனுமதியின்றி, அவருக்கு வாய் வழியாகவோ அல்லது நரம்பு வழியாகவோ எந்த மருந்தையோ அல்லது திரவத்தையோ வழங்கக்கூடாது என்று கீதாஞ்சலி கேட்டுக்கொண்டார்.

நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக, சோனம் வாங்சுக் கடந்த 20 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். ஆனால், சனிக்கிழமை காலை அவர் அங்கிருந்து அகற்றப்பட்டார்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலேயே சோனம் வாங்சுக் அங்கிருந்து அகற்றப்படுவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

By admin