• Sun. Aug 17th, 2025

24×7 Live News

Apdin News

சோனாலி படே: மகாராஷ்டிராவில் குழந்தை திருமணத்தை ஏற்க மறுத்து ஓடும் காரில் இருந்து குதித்த சிறுமியின் கதை

Byadmin

Aug 17, 2025


சோனாலி படே, குழந்தைத் திருமணம்
படக்குறிப்பு, குழந்தைத் திருமணம் என்ற சமூக இடரில் சிக்கினாலும் படிப்பு என்ற கனவை நனவாக்கிய சோனாலி படே

“சோட்டி ஸி உமர்….” என்று துவங்கும் மெகா சீரியலின் பாடல் ஒலிக்காத வீடுகளே வட இந்தியாவில் இல்லை என்று சொல்லலாம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா தொடர்களில் மிகவும் பேசப்பட்ட இந்தி மொழித் தொடர், ‘பாலிகா வது’.

குழந்தைப் பருவ திருமணத்தை மையக்கருவாக கொண்ட தொடர் அது. நிதர்சனத்தில் இந்த கதையின் நாயகியுடன் சோனாலி படேவை ஒப்பிடலாம். இந்தப் பெண்ணும் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர்.

“நான் 9ஆம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். எனக்கு திருமணம் நடைபெற்றபோது எனக்கு 13 வயது, மாப்பிள்ளைக்கு 30 வயது.”

உலகம் தெரியாத வயதிலேயே குடும்பத்தினரின் கட்டாயத்தால் சோனாலிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. தற்போது 26 வயதாகும் சோனாலி, 13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்தை நினைக்கும் போது உணர்ச்சிவசப்படுகிறார்.

By admin