• Mon. Nov 17th, 2025

24×7 Live News

Apdin News

சௌதி அரேபியாவில் இந்தியர்கள் சென்ற பேருந்து விபத்து – என்ன நடக்கிறது?

Byadmin

Nov 17, 2025


சௌதி அரேபியாவில் பேருந்து விபத்து, இந்தியர்களின் கதி என்ன?

பட மூலாதாரம், Raj K Raj/Hindustan Times via Getty

படக்குறிப்பு, கோப்புப் படம்

(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

சௌதி அரேபியாவுக்கு புனித யாத்திரை சென்ற இந்தியர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

சௌதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இந்த விபத்தை உறுதி செய்திருக்கிறது. இருந்தாலும், எத்தனை பேர் உயிரிழந்தனர்? எத்தனை பேர் காயமடைந்தனர்? என்பது பற்றிய முழு விவரம் இன்னும் தெரியவில்லை.

ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஒரு கட்டுப்பாட்டு அறையையும் அமைத்திருக்கிறது. “சௌதி அரேபியாவின் மதீனா அருகே இந்திய யாத்ரீகர்கள் பயணம் செய்த பேருந்து துயர விபத்தை சந்தித்தது. இதையடுத்து, ஜெட்டாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது” என்று துணை தூரதகம் அறிவித்திருக்கிறது.

உதவி எண்: 8002440003

By admin