• Wed. Jan 21st, 2026

24×7 Live News

Apdin News

ஜன நாயகன் திரைப்பட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – இறுதி விவாதத்தில் நடந்தது என்ன?

Byadmin

Jan 21, 2026


ஜன நாயகன், திரைப்பட சான்று, சென்னை உயர் நீதிமன்றம், சான்றிதழ் வாரியம், சான்றிதழ் சர்ச்சை

பட மூலாதாரம், KVN Productions

ஜன நாயகன் படத்திற்கு யு/ஏ சான்று வழங்கிய தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சிபிஎஃப்சி) தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்ற விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதம்

இந்த வழக்கில் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், வாரியம் பதிலளிக்க உரிய கால அவகாசம் கொடுக்கப்படவில்லை என்றும் தயாரிப்பு நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கில், படத்தை மறு ஆய்விற்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்யுமாறு வலியுறுத்தவில்லை என்றும் தெரிவித்ததாக லைவ் லா செய்தி கூறுகிறது.

தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஷ் பராசரன், படத்தை ஆய்வு செய்த சான்றிதழ் வாரிய குழு ஒருமனதாக பரிந்துரை வழங்கிய பிறகு அந்த முடிவு எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது அதனை மறு ஆய்விற்கு அனுப்பியிருக்க முடியாது என வாதிட்டதாகவும் லைவ் லா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு ஒரு மனதாக எடுக்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு உறுப்பினர் வேறு விதமாக முடிவெடுத்தாலும் பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவையே ஏற்க வேண்டும் என்றும் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.

By admin