• Fri. Aug 15th, 2025

24×7 Live News

Apdin News

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் எப்படி பரவுகிறது? தமிழக அரசின் தடுப்பூசி யாருக்கு அவசியம்? – முழு விவரம்

Byadmin

Aug 15, 2025


    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

ஒன்று முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசியை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, தென்காசி, நாகப்பட்டினம் என தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே 15 மாவட்டங்களில் இந்த தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்றால் என்ன?

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்பது மூளையை தாக்கும் ஒரு வைரஸ் நோயாகும். இந்த நோயை ஏற்படுத்தும் வைரஸ்- ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸ் (Japanese Encephalitis Virus) என்றழைக்கப்படுகிறது. இது மனிதர்களுக்கு குலெக்ஸ் ட்ரைடானியோரின்கஸ் (Culex tritaeniorhynchus) எனும் கொசு வகை மூலமாக பரவுகிறது.

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

மனிதர்களிடமிருந்து பரவக்கூடுமா?

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸ் பன்றிகள் மற்றும் பறவைகளிடம் காணப்படுகிறது. அவற்றிலிருந்து கொசுக்களுக்கு பரவுகிறது. இந்த வைரஸை கொண்ட கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் போது, மனிதர்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்நோய் பரவுவதில்லை. எனவே ஒருவரை தொடுவதாலோ அல்லது அவரது எச்சில் மூலமாகவோ இந்த நோய் பரவ வாய்ப்பில்லை.

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி

இந்த நோயின் அறிகுறிகள் என்ன?

பெரும்பாலான நேரங்களில் இந்நோய் காய்ச்சல், தலைவலி போன்ற லேசான அறிகுறிகளுடன் காணப்படும். ஆனால் சில நேரங்களில் அதீத காய்ச்சல், வலிப்பு, கோமா, மனபிறழ்வு, பக்கவாதம் ஏற்படலாம்.

By admin