• Wed. Nov 19th, 2025

24×7 Live News

Apdin News

ஜமால் கஷோக்ஜி கொலை – செளதி இளவரசர் சல்மானுக்கு ஆதரவாக டிரம்ப் கூறியது என்ன?

Byadmin

Nov 19, 2025


பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை தொடர்பாக டிரம்ப் கூறியது என்ன ?

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2018ல் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு “எதுவும் தெரியாது” என்று கூறினார்.

இளவரசர் முகமது பின் சல்மானை வெள்ளை மாளிகையில் சந்தித்தபோது டொனால்ட் டிரம்ப் இவ்வாறு தெரிவித்தார்.

ஆனால், 2021ல் வெளியான அமெரிக்க உளவுத்துறை மதிப்பீட்டில், 2018ல் இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில் கஷோக்ஜியின் கொலைக்கு வழிவகுத்த நடவடிக்கைக்கு இளவரசர் ஒப்புதல் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. டிரம்பின் கருத்துகள் அந்த மதிப்பீட்டுக்கு முரணாகத் தோன்றின.

எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்த பட்டத்து இளவரசர், வெள்ளை மாளிகையில் பேசியபோது, கஷோக்ஜியின் மரணத்தை விசாரிக்க செளதி அரேபியா ” முறையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தது” என்றும், இந்த சம்பவம் “வேதனையானது” என்றும் கூறினார்.

அந்தக் கொலை சம்பவத்திற்குப் பிறகு, அமெரிக்காவுக்கு முதல் முறையாக அவர் வருகை தருகிறார். அச்சம்பவம், அமெரிக்கா – செளதி உறவுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

By admin