• Sat. Dec 13th, 2025

24×7 Live News

Apdin News

ஜாக்டோ ஜியோ போராட்டத்தை திமுக அரசு தூண்டுகிறதா? – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பதில்

Byadmin

Dec 13, 2025


திருநெல்வேலி: ஜாக்டோ ஜியோ போராடுவது அவர்கள் உரிமை. போராட்டத்தை தூண்ட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. அவர்களுக்கு என்னவெல்லாம் நல்லது செய்ய வேண்டுமோ அதை எல்லாம் தமிழக அரசு செய்கிறது என தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் வ.உ.சியின் நினைவு தினத்தை ஒட்டி அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சட்ட பேரவை தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசியலில் இருப்பவர்கள் வஉசியை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். எஸ்ஐஆர் விவாகரத்தில் திமுகவுக்கு அச்சமில்லை.

By admin