• Sat. Sep 6th, 2025

24×7 Live News

Apdin News

ஜிஎஸ்டி சீரமைப்பால் மாநிலங்களுக்கு இழப்பா? தமிழ்நாடு, கேரளா சொல்வது என்ன?

Byadmin

Sep 4, 2025


ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் புதன்கிழமையன்று கூடியது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் புதன்கிழமையன்று கூடியது.

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) இரண்டு அடுக்காக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த வரி சீரமைப்பு வரவேற்பைப் பெற்றிருந்தாலும் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பு குறித்த அச்சங்களும் நீடிக்கின்றன.

கேரள மாநில நிதியமைச்சர் கே.என். பாலகோபால், புதிய ஜிஎஸ்டி அமலாக்கத்தால் கேரளாவுக்கு 8 ஆயிரம் கோடி முதல் பத்தாயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு இருக்கலாம் என உத்தேசமாக தெரிவித்திருக்கிறார்.

‘தீபாவளி பரிசாக’ வந்த அறிவிப்பு

இந்தியாவின் சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, “தீபாவளி பரிசாக ஜி.எஸ்.டி. வரி விகிதம் மாற்றியமைக்கப்படும்” என அறிவித்தார். நான்கு அடுக்குகளாக உள்ள ஜி.எஸ்.டி வரி, திருத்தத்துக்குப் பிறகு 5 சதவிகிதம் மற்றும் 18 சதவிகிதம் என இரண்டு அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

By admin