• Sat. Sep 6th, 2025

24×7 Live News

Apdin News

ஜிஎஸ்டி வரிச்சீரமைப்பு; திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் கூறுவது என்ன? – மக்களுக்கு என்ன லாபம்?

Byadmin

Sep 6, 2025


ஜிஎஸ்டி மறுசீரமைப்பு அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜிஎஸ்டி மறுசீரமைப்பு அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மறுசீரமைப்பு பற்றிய அறிவிப்பை செப்டெம்பர் 4ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

இதில் ஜவுளித்துறையில் 54 விதமான வரியினங்கள் மாற்றப்பட்டுள்ளதால், உள்நாட்டு விற்பனையும், அதன் தொடர்ச்சியாக உற்பத்தியும் அதிகரிக்குமென்று ஜவுளித்துறையினர் இதற்கு வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

செயற்கை நுால் போன்றவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதற்கு ஆடை ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு தெரிவித்த போதும், அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரியால் ஏற்பட்டுள்ள பாதிப்பை இது ஈடுசெய்யாது என்கின்றனர்.

அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்துவது, ஏற்றுமதிக்கு ஊக்கத்தொகை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசிடம் எதிர்பார்ப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

By admin