• Mon. Jun 9th, 2025

24×7 Live News

Apdin News

ஜிட்டப்பள்ளி: வேலூர் அருகே கோவில் வழிபாட்டில் இந்து – முஸ்லிம் இடையே என்ன பிரச்னை?

Byadmin

Jun 9, 2025


பன்றி, பலியிடுதல், சர்ச்சை, வேலூர், கோயில் திருவிழா, மசூதி
படக்குறிப்பு, காளியம்மன் கோயில் திருவிழா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கோவில் திருவிழாவில் பன்றியை பலியிட அதே பகுதியில் அமைந்துள்ள மசூதி நிர்வாகத்தினர் ஆட்சேபனை தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது.

“கோவில் வழிபாடு நடத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆர்.டி.ஓ நடத்திய பேச்சுவார்த்தையில், திருவிழாவில் ஆடு, கோழி பலியிட்டு அன்னதானம் செய்வதாகக் கூறினர். மாறாக, மசூதி அருகில் பன்றியை பலியிட முயற்சி செய்தனர். இது தான் பிரச்னைக்கு காரணம்” என்கிறார் குடியாத்தம் ஜிட்டப்பள்ளி பள்ளிவாசல் நிர்வாகி சாதிக் பாட்ஷா.

ஆனால், பாரம்பரியமாக உள்ள தங்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் வகையில் மசூதி நிர்வாகத்தினர் செயல்படுவதாகக் கூறுகின்றனர் கோவில் நிர்வாகத்தினர்.

வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கூறுவது என்ன?

By admin