• Sun. Sep 13th, 2026

24×7 Live News

Apdin News

ஜின்பிங்கின் இந்திய பயணம் மற்றும் பிரிக்ஸ் மாநாடு பற்றி சீன ஊடகங்கள் கூறுவது என்ன?

Byadmin

Sep 13, 2026


சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும்

பட மூலாதாரம், DD News/ANI Video Grab

படக்குறிப்பு, சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஷி ஜின்பிங் புதுடெல்லி வந்துள்ளார். ஷி ஜின்பிங்கைத் தவிர, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் மற்றும் பல நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளத் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

இந்த உச்சிமாநாடு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்தியா நான்காவது முறையாகப் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்குத் தலைமை தாங்கி நடத்துகிறது. தற்கால உலகளாவிய சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, பிரிக்ஸ் அமைப்பின் இந்த மாநாடு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மறுபுறம், இரான் போர் காரணமாக மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் சூழல் மிகவும் சிக்கலாக மாறியுள்ளது. அதேவேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புக் கொள்கைகளும் உலகளாவிய வர்த்தகம் தொடர்பான அவரது நிலைப்பாடும் பல நாடுகளுக்குப் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன.

இத்தகைய சூழலில், அமெரிக்காவுக்கு முன்பாக ராணுவ மற்றும் பொருளாதார ரீதியான ஒரு வல்லரசாக மட்டுமல்லாமல், மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் விநியோகஸ்தராகவும் சீனா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

By admin