• Tue. Nov 11th, 2025

24×7 Live News

Apdin News

ஜூனாகத் இந்தியாவின் ஒரு பகுதியான கதை: பாகிஸ்தானுடன் இணையும் நவாப் அறிவிப்பு என்ன ஆனது?

Byadmin

Nov 11, 2025


ஜுனாகத், இந்தியா, பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜுனாகத் (கோப்புப்படம்)

இந்தியா சுதந்திரம் பெற்றபோது, ஹைதராபாத், காஷ்மீர், ஜூனாகத் ஆகிய மூன்று சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

ஜூனாகத் என்பது கிர்னார் மலைகளின் காடுகளுக்கும் அரபிக்கடலுக்கும் இடையில் அமைந்திருந்த ஒரு சமாஸ்தானமாகும்.

அந்தக் காடு சிங்கங்களுக்காகப் பிரபலமானது.

ஜூனாகத்தின் ஆட்சியாளராக நவாப் முகமது மஹாபத் கான் இருந்தார். அங்கே வாழ்ந்த மக்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள்.

ஜூனாகத் மூன்று பக்கங்களிலும் இந்தியாவால் சூழப்பட்டிருந்தது. நான்காவது பக்கத்தில் நீண்ட கடற்கரை இருந்தது.

By admin