28
ஜெர்மனியின் சட்டமன்ற உறுப்பினர்கள், இராணுவ பயன்பாட்டிற்காக தாக்குதல் ட்ரோன்களை வழங்கும் திட்டத்திற்கு முதல் முறையாக அதிகாரப்பூர்வ ஒப்புதலை வழங்கியுள்ளனர். இந்த முடிவு, நாட்டின் பாதுகாப்புக் கொள்கையில் முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது.
இதன் அடிப்படையில், ஜெர்மனியின் பாதுகாப்புத் துறையில் செயல்படும் தொடக்க நிறுவனங்களான Helsing மற்றும் பெர்லினை தலைமையிடமாகக் கொண்ட Stark Defence ஆகியவற்றுடன் ஒப்பந்தங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு சுமார் €536 மில்லியன் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கும், NATO அமைப்பின் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்துவதற்குமான நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தயாரிக்கப்படும் தாக்குதல் ட்ரோன்கள் 2027ஆம் ஆண்டுக்குள் Lithuania நாட்டிற்கு அனுப்பப்படவுள்ளன என்றும் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த தீர்மானம், ஐரோப்பாவின் பாதுகாப்பு சூழலில் ஜெர்மனியின் பங்கு மேலும் வலுப்பெறும் என்பதோடு, நேட்டோ கூட்டமைப்பின் ஒட்டுமொத்த இராணுவத் தயார்நிலையையும் உயர்த்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.