• Mon. Jun 2nd, 2025

24×7 Live News

Apdin News

ஜேஎன்.1: இந்தியாவில் 2022-ல் செலுத்திய கொரோனா தடுப்பூசி இப்போது பரவும் திரிபுக்கு எதிராக பலன் தருமா?

Byadmin

May 31, 2025


கொரோனா தடுப்பூசி, ஜேஎன்.1 திரிபு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்படுவது அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்படுவது அதிகரித்து வருகிறது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. புனே ஆய்வு மையத்துக்கு 17 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. கொரோனா பரவல் குறித்து பதற்றம் அடைய வேண்டாம்.” என்று தெரிவித்தார்.

கொரோனாவின் மூன்று அலைகள் இதற்கு முன்பு வந்து போய் உள்ளன. அப்போது நோயின் தீவிரம் அதிகமாக இருந்ததால், பலர் உயிரிழந்தனர். பின்னர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கத்தால் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக ஏராளமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆனால், 2022-ஆம் ஆண்டு வரை நாம் எடுத்துக்கொண்ட தடுப்பூசிகள் இந்தப் புதிய வகைக்கு எதிராக பயனுள்ளதாக இருக்குமா? புதிய வகை வைரஸால் கொரோனாவின் புதிய அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதா?

By admin